சென்னை: உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு பாசிச பாஜக ஆட்சிக்கு கிடைத்த சம்மட்டி அடி என்று செல்வப்பெருந்தகை கருத்து தெரிவித்துள்ளார். வழக்கு விசாரணை முடியாமலேயே ஒரு மாநில முதல்வரை கைது செய்வது நாட்டிற்கு அவமானம் எனவும் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜூன் 1ம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது.