இதையடுத்து, மேற்கண்ட விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் பதிவாளர் மகேஷ் தனஞ்ஜிராவ் பதன்கர் முன்னிலையில் ஆஜரான அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பு மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி மனுவை அவசர வழக்காக பட்டியலிட வேண்டினார். அரவிந்த் கெஜ்ரிவாலின் கோரிக்கையை நிராகரிப்பதாக தெரிவித்த உச்ச நீதிமன்ற பதிவாளர்,‘‘மனுவை அவசர வழக்காக கண்டிப்பாக பட்டியலிட முடியாது. அவசர கால நிவாரணம் தேவையென்றால், விசாரணை நீதிமன்றத்தை அணுகி தகுதியின் அடிப்படையில் ஜாமீன் மனு தாக்கல் செய்து நிவாரணம் கேட்டு பெற்றுக்கொள்ளலாம் என்று கூறினார்.