டெல்லி: இடைக்கால ஜாமீனை நீட்டிக்கக்கோரி கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு குறித்து அமலாக்கத்துறை பதிலளிக்க டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இடைக்கால ஜாமீனை நீட்டிக்கக் கோரியும், ஜாமீன் வழங்கக் கோரியும் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை ஜூன் 1க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இடைக்கால ஜாமீன் முடியும் கடைசி நேரத்தில் ஜாமீன் கேட்டும், இடைக்கால ஜாமீனை நீட்டிக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்துள்ளார். அதனால் எங்களுக்கு அவகாசம் வேண்டும் என அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.