Sunday, September 15, 2024
Home » கெஜ்ரிவால் சாப்பிட்டது சர்க்கரை இல்லாத இனிப்புகள்: அமலாக்கத்துறை குற்றச்சாட்டுக்கு அவரது தரப்பு மறுப்பு

கெஜ்ரிவால் சாப்பிட்டது சர்க்கரை இல்லாத இனிப்புகள்: அமலாக்கத்துறை குற்றச்சாட்டுக்கு அவரது தரப்பு மறுப்பு

by Neethimaan

 

டெல்லி: டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சர்க்கரை அளவை உயர்த்த சிறையில் இனிப்பு உணவுகளை எடுத்துக் கொள்கிறார் என்ற அமலாக்கத்துறை குற்றச்சாட்டுக்கு அவரது தரப்பு மறுப்பு தெரிவித்துள்ளது. டெல்லி மதுபான கொள்கை வழக்கில் முதல்வர் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கைது செய்து திகார் சிறையில் அடைத்துள்ளது. சர்க்கரை நோயாளியான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் ஊசி போட அனுமதி கோரிய வழக்கு டெல்லி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது அவர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்; சிறையில் உள்ள கெஜ்ரிவால் நவராத்ரி பூஜை பிரசாதமான ஆலு பூரி ஒரு முறையும், மாம்பழம் மற்றும் சர்க்கரை இல்லாத இனிப்புகளை 3 முறை மட்டுமே சாப்பிட்டதாக வாதிட்டார். அதோடு சர்க்கரை இல்லாத தேநீரையே அவர் அருந்தியதாகவும் குறிப்பிட்டார். ஆனால் சர்க்கரை அளவை அதிகரித்து ஜாமீன் பெற முயற்சிப்பதாக அமலாக்கத்தித்துறை கூறுவது அபத்தமானது என்றும், கெஜ்ரிவால் குற்றவாளி கிடையாது என்றும்,

அவர் தமது மருத்துவருடம் 15 நிமிடங்கள் கூட வீடியோ கான்பரன்சிங் மூலம் பேச முடியவில்லை என்றும் தெரிவித்தார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் விசாரணையை ஒத்திவைத்தனர்.

You may also like

Leave a Comment

5 + six =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi