திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வெம்பாக்கத்தில் இளைஞரைக் கொன்று செல்போன், பைக் திருடிய செல்வம் என்பவர் கைது செய்யப்பட்டார். நவ.2ல் செல்வராஜு என்பவர் உடல் மீட்கப்பட்ட நிலையில் ஒரு மாதத்திற்கு பின் கொலையில் துப்பு துலங்கியது. செல்போன், பைக் திருடிச் செல்லும் நோக்கில் செல்வராஜு தலையில் கல்லைப் போட்டு கொலை செய்தது அம்பலமாகியுள்ளது.