சென்னை: கீழ்பவானி கால்வாயில் திட்டமிட்டபடி ஆக.15-ல் தண்ணீர் திறக்கப்படும் என அமைச்சர் சு.முத்துசாமி தெரிவித்துள்ளார். ஆகஸ்ட் 15-ம் தேதிக்கு முன்பாக கால்வாய் சீரமைப்பு பணிகளை முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்திக்கடவு அவினாசி திட்ட பணிகளில் கடந்த ஆட்சியில் விவசாயிகளிடம் நிலம் கையகப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை என அமைச்சர் தெரிவித்தார்.