ஆனால் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து பெய்த பருவமழையால் கடந்த 14ம் தேதி முதல் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஆழியார் மற்றும் அதனை சுற்றியுள்ள வனப்பகுதியில் அவ்வப்போது கனமழை பெய்கிறது. இதனால் நீரோடைகளில் இருந்து தண்ணீர் ஆர்ப்பரித்து வருவதால், கவியருவியில் சுமார் 2 வாரமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக, அருவிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தொடர்ந்து தடை விதிக்கப்பட்டது. ஆழியார் சோதனைச்சாவடியிலிருந்து, கவியருவிக்கு வந்த சுற்றுலா வாகனங்கள் திருப்பி அனுப்பப்படுகிறது. தற்போதும் கவியருவியில் காட்டாற்று வெள்ளம்போல் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதையடுத்து, தடையை மீறி யாரேனும் வனத்திற்குள் செல்கிறார்களா என வனச்சரகர் ஞானமுருகன் தலைமையில் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.