குறிப்பாக இப்பள்ளியில் பூப்பந்தாட்ட விளையாட்டு போட்டியில் 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பயிற்சி மேற்கொண்டு மாநில, மாவட்ட அளவில் பூப்பந்தாட்ட போட்டியில் பங்கேற்று தங்கம், வெள்ளி பரிசுகள் வென்றுள்ளனர். அதேபோன்று, கடந்த ஆண்டு தர்மபுரியில் நடைபெற்ற மாநில அளவிலான போட்டியில் முதலிடம் பிடித்து தங்கம் வென்றனர். இந்நிலையில், அம்பத்தூர் சேது பாஸ்கரா பள்ளியில் கடந்த 17, 18ம் தேதிகளில் சென்னை வருவாய் மாவட்ட அளவிலான பூப்பந்து போட்டிகள் நடைபெற்றது. இதில், 23 குறுவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றிபெற்ற 23 பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு விளையாடினர்.
இப்போட்டியில், கத்திவாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 14 மற்றும் 17 வயதில் மாணவியர் பிரிவிலும், 17 வயது மாணவர் பிரிவிலும் சிறப்பாக விளையாடி முதல் இடத்தை பிடித்தனர். இந்த வெற்றியின் மூலம் மாணவ, மாணவிகள் திருச்சியில் நடைபெறவுள்ள மாநில அளவிலான குடியரசு தின பூப்பந்தாட்ட போட்டியில் கலந்துகொள்ள தகுதி பெற்றுள்ளனர். இவ்வாறு, பூப்பந்தாட்ட போட்டியில் முதலிடம் பிடித்து சாதனை படைத்த மாணவ, மாணவிகளுக்கு தலைமை ஆசிரியை எல்.கமலா, உதவி தலைமை ஆசிரியை தேவி பாலா, மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் துரைராஜ், கண்டம்மாள், கோல்டன் மெல்பா ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.