கூட்டத்தில் பள்ளி மேலாண்மைக்குழுவின் தலைவராக சுசிலா ஆல்வின் பாபு ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். 2024-2026 ஆண்டுக்கான பள்ளி கல்வி மேலாண்மைக்குழு உறுப்பினர்களாக 24 பேர் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் அனைவருக்கும் சான்றிதழ் அளிக்கப்பட்டது. கூட்டத்தின் முடிவில் பள்ளி ஆசிரியர் எமிலா நன்றி கூறினார். கூட்டத்தில் பள்ளியின் ஆசிரியர்கள், பெற்றோர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.