Tuesday, September 17, 2024
Home » காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு

by Dhanush Kumar

புதுடெல்லி: ஜம்மு காஷ்மீரில் 370வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பு வழங்குகிறது. ஜம்மு-காஷ்மீர்மாநிலத்துக்கு சிறப்பு அஸ்தஸ்து வழங்கும் 370வது பிரிவை ஒன்றிய அரசு கடந்த 2019ம் ஆண்டு ரத்து செய்தது. இந்த நடவடிக்கையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்தது.

அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் ஜம்மு காஷ்மீர் தொடர்பான வழக்கில் அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பு வழங்குகிறது.
இதில் ஜம்மு காஷ்மீர் இடஒதுக்கீடு மசோதா 2023, ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா 2023 ஆகிய மசோதாக்களை ஒன்றிய அரசு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றி இருக்கும் சூழலில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370வது பிரிவு ரத்து செய்யப்பட்டது தொடர்பான வழக்கின் தீர்ப்பு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

You may also like

Leave a Comment

18 + 20 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi