மென்தர்: ஜம்மு காஷ்மீர் பூஞ்ச் மாவட்டத்தில் எல்லையோர கிராமமான மென்தரின் பதனதீர் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. நேற்று அதிகாலை பாதுகாப்பு படையினர் அங்கு சென்ற போது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு படையினர் பதில் தாக்குதல் நடத்தினர். இந்த துப்பாக்கி சண்டையால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது.