காஷ்மீர் என்கவுன்டரில் 4 தீவிரவாதிகள் பலி: ஒரு ராணுவ வீரரும் வீரமரணம்

ஸ்ரீநகர்: காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் நடந்த மோதலில் 4 தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். ஒரு ராணுவ வீரர் வீரமரணமடைந்தார். காஷ்மீரில் அமர்நாத் யாத்திரை நடந்து வருகிறது.இந்தநிலையில் குல்காம் மாவட்டம்,மோடர்காம் என்ற இடத்தில் பாதுகாப்பு வீரர்களுக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. இதில்,ஒரு ராணுவ வீரர் உயிரிழந்தார்.

அந்த மாவட்டத்தில் உள்ள பிரிசல் சின்னிகாம் என்ற இடத்தில் பாதுகாப்பு படையினர் தீவிரவாதிகளுக்கு எதிராக தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது பாதுகாப்பு படையினர் மீது தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். இதில், இரு தரப்புக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. இதில், 4 தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். அங்கு தொடர்ந்து சண்டை நீடிக்கிறது என தகவல்கள் வந்துள்ளன.

Related posts

சென்னை பல்லவன் இல்லத்தில் 100 புதிய பேருந்துகளை கொடியசத்து தொடங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதிஸ்டாலின்

நெல்லை மேயருக்கான தேர்தலில் திமுக வேட்பாளராக ராமகிருஷ்ணன் என்கிற கிட்டு அறிவிப்பு

ஆடிப்பெருக்கையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு