திருவனந்தபுரம்: கேரள மாநிலம் காசர்கோடு அருகே சட்டஞ்சால் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (38). கடந்த சில வாரங்களுக்கு முன்பு அங்கு வைத்து அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. கண்ணூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் மணிகண்டனுக்கு அமீபா மூளைக்காய்ச்சல் பரவியது தெரியவந்தது. தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் மணிகண்டன் மரணமடைந்தார்.