கரூர்: கரூரில் பாத்திமா என்பவர் கந்துவட்டி கொடுமையால் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். பாத்திமா கணவர் ஜெய்னுல்லாபுதீன் அவரது நண்பருக்கு தனியார் பைனான்சில் தவணை முறையில் டிவி, செல்போனை வாங்கி கொடுத்துள்ளார். நண்பர் சாகுல் அமீது ஊரை விட்டு சென்றதால் ஜெய்னுல்லாபுதீன், பாத்திமாவிடம் பணம் கேட்டு பைனான்ஸ் ஊழியர்கள் தொல்லை செய்துள்ளனர்.