கரூர்: கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே பள்ளப்பட்டியில் தெரு நாய் கடித்து இரண்டரை வயது குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை தெருநாய்கள் துரத்திக் கடித்துள்ளது. தெருநாய் கடித்ததில் காயம் அடைந்த குழந்தைக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பள்ளப்பட்டியில் தெருநாய்களை கட்டுப்படுத்தக் கோரியும் குழந்தைக்கு நிவாரணம் வழங்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.