கரூர், ஏப். 27: கரூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் ஆண்டாய்வு மேற்கொண்டார்.இந்த ஆய்வில், அலுவலக வளாகத்தின் சுற்றுப்புற தூய்மை, அலுவலக தூய்மை, ஒதுக்கீடு செய்யப்பட்ட பணிகளின் கோப்புகள் மற்றும் பதிவேடுகள், கணினி அறை, பதிவறையில் உள்ள கோப்புகள் மற்றும் பதிவேடுகளில் உள்ள முக்கிய கோப்புகளை ஆய்வு மேற்கொண்டு பதிவேடுகளை முறையாக பராமரிக்க வேண்டும் என அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார். தொடர்ந்து, குடிநீர், கழிப்பறை மற்றும் அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.இந்த நிகழ்வில், கோட்டாட்சியர் ரூபினா, தனித்துணை ஆட்சியர் சைபுதீன், கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் சக்திவேல், கரூர் தாசில்தார் (பொ) ரவிக்குமார் உட்பட அனைவரும் கலந்து கொண்டனர்.