கரூர் அருகே மின்சாரம் பாய்ந்து வட மாநில தொழிலாளி பலி

 

கரூர், ஜூலை 31: கரூர், சுக்காலியூர் அருகே டையிங் நிறுவனத்தில் பணியாற்றி வந்த வட மாநில தொழிலாளி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தது குறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.கரூர் மாவட்டம், தாந்தோணிமலை அடுத்துள்ள சுக்காலியூரில் உள்ள ஒரு டையிங் நிறுவனத்தில் உத்தரபிரதேசத்தை சேர்ந்த ஆகாஷ்குமார் (19) என்ற வாலிபர் பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் நிறுவனத்தின் மேல் பகுதியில் நின்று பணியாற்றிக் கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிமாக மின்சாரம் பாய்ந்து கீழே விழுந்து இறந்ததாக கூறப்படுகிறது.தகவல் அறிந்த தாந்தோணிமலை போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று அசோக்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து வழக்குப் பதிந்து ஆகாஷ்குமார், மின்சாரம் பாய்ந்துதான் இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

திருவெறும்பூர் அருகே மஞ்சள் காமாலைக்கு பச்சிளம் குழந்தை பலி

லால்குடி அருகே சங்கிலி கருப்பு கோயிலில் கொள்ளை முயற்சி

மக்கள் குறைதீர் கூட்டத்தில் 468 மனுக்கள் பெறப்பட்டது