மதுரை: கரூர் மாவட்ட அரசு ஹாஜியாக சிராஜுதீன் அகமதுவை நியமித்த உத்தரவை ஐகோர்ட் மதுரை கிளை ரத்து செய்தது. மாவட்ட ஹாஜியை நியமிக்கும் அதிகாரம் அரசுக்கு உள்ளது என்றாலும் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். கரூரைச் சேர்ந்த ராஜ் கபூர் என்பவர் தாக்கல் செய்த வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு அளித்தது. கரூர் மாவட்ட அரசு ஹாஜி நியமிக்கப்பட்டத்தில் உரிய விதிகள் பின்பற்றப்படவில்லை என மனுதாரர் புகார் அளித்துள்ளார்.