கரூர்: செப்டம்பர்.9 முதல் கரூர் மாவட்டம் புகளூர் வட்டம் நொய்யல் ஆத்துப்பாளையம் நீர்தேக்கத்திலிருந்து நீர் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. செப்டம்பர்.9 முதல் டிசம்பர் .7 வரை 90 நாட்கள் முறைவைத்து 48 நாட்களுக்கு மொத்தம் 414.720 மில்லியன் கனஅடிக்கு மிகாமல் திறக்கப்படும். 90 நாட்களில் முறைவைத்து நீர் திறக்கப்படுவதன் மூலம் புகளூர், மண்மங்கலம் வட்டத்தில் 19,480 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.