புதுடெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரத்தின் மகனும் எம்பியுமான கார்த்தி சிதம்பரத்தின் மீது ஏர்டெல் மேக்சிஸ் மற்றும் ஐஎன்எக்ஸ் மீடியா உள்ளிட்ட 4 மோசடி மற்றும் ஊழல் வழக்குகளை சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்நிலையில், டென்னிஸ் போட்டிகளில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்க லண்டன் மற்றும் ஸ்பெயின் நாடுகளுக்கு செல்ல அனுமதி கோரி டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் மனு செய்திருந்தார்.