ஹாவேரி மாவட்டம் ஷிங்காவி நகரைச் சேர்ந்தவர் லதா. கிரகலட்சுமியின் பயனாளியான இவர், மாநில அரசு கிரகலட்சுமி திட்டத்தை அமல்படுத்தியபோது, இத்திட்டத்தின் பயனாளியாக தேவையான ஆவணங்களை வழங்கினார். திட்டம் செயல்படுத்தப்பட்டதில் இருந்து ஒவ்வொரு மாதமும் ₹2000 அவரின் வங்கி கணக்கிற்கு சென்று கொண்டிருந்தது. இதனை வங்கியில் இருந்து எடுக்காமல் பராமரித்து வந்தார். இந்நிலையில், யுகாதி பண்டிகைக்காக 17,500 ரூபாய் மதிப்பிலான ப்ரிட்ஜ் வாங்கி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
ஃபிரிட்ஜ் வாங்கியதும், ஒரு பெண் பிரிட்ஜில் ‘கிரகலட்சுமி’ என்று பலகை வைத்தார். வீட்டிற்கு கொண்டு வந்து பூஜை செய்து பயன்படுத்தினார்கள். கிரகலட்சுமி பணத்தில் என்ன வாங்கலாம் என்று காட்டியுள்ளார் இந்தப் பெண்.