ஆனால் இலவச பேருந்து திட்டத்தில் தனியார் பேருந்துகளை சேர்த்தால் அரசுக்கு கூடுதலாக 5,500 கோடி ரூபாய் செலவாகும் என்று கூறி அந்த கோரிக்கைகளை ஏற்க போக்குவரத்துத் துறை மறுத்துள்ளது. இந்த நிலையில் மகளிர் இலவச பேருந்து பயண திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, 32 தனியார் போக்குவரத்து சங்கங்கள் இன்று ஒரு நாளை வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் ஆட்டோக்கள், வாடகை கார்கள், சரக்கு வாகனங்கள், பள்ளி வாகனங்கள் என சுமார் 10 லட்சம் வாகன உரிமையாளர்கள் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இதனால் வாரத்தின் முதல் வேலை நாளான இன்று பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்வோர் தனியார் பேருந்துகள் மற்றும் வாடகை வாகனங்கள் கிடைக்காமல் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.