இந்நிலையில், பெங்களூருவிலிருந்து தமிழகத்திற்கு மெட்ரோ ரயிலை நீட்டிக்க எதிர்ப்பு தெரிவித்து ஓசூர் அருகே கர்நாடகா-தமிழக எல்லையான அத்திப்பள்ளி – ஜூஜூவாடி இடையே தேசிய நெடுஞ்சாலையில் நேற்று கன்னட சலுவளி, கன்னட ரக்சன வேதிகே ஆகிய அமைப்பினர் மறியல் போராட்டம் நடத்தினர். ஓசூரிலிருந்து கர்நாடகா சென்ற வாகனங்களை தடுத்து மறியலில் ஈடுபட்ட வாட்டாள் நாகராஜ் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
அப்போது வாட்டாள் நாகராஜ் அளித்த பேட்டியில், ‘ஓசூரை கர்நாடக மாநிலத்துடன் இணைக்க வேண்டும். காமராஜர் ஆட்சி காலத்தில்தான் ஊட்டி, ஓசூர் தமிழகத்துடன் இணைக்கப்பட்டது. ஓசூரை இணைத்த பிறகு தான் மெட்ரோ திட்டம் ஓசூர் வரை நீட்டிக்கப்பட வேண்டும். இல்லையென்றால் ஒரு அங்குலம் கூட நீட்டிக்க அனுமதிக்க மாட்டோம். மேகதாதுவில் அணைக்கட்டும் விவகாரத்தில் ஒன்றிய அரசு அனுமதியளிக்காவிட்டாலும், மாநில அரசு நிதி ஒதுக்கீடு செய்யாவிட்டாலும் மக்களை திரட்டி நாங்களே கட்டுமான பணியில் ஈடுபடுவோம்’ என்றார்.