பெங்களூரு : கர்நாடகாவில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மாணவிகள் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடை நீக்கம் செய்யப்படுவதாக அம்மாநில முதலமைச்சர் சித்தராமைய்யா அறிவிப்பு வெளியிட்டுள்ளார். “எந்த உடை அணிவது, என்ன உணவு சாப்பிடுவது என்பது அவரவர்களுடைய தனிப்பட்ட விருப்பம். அதை நான் ஏன் தடுக்க வேண்டும்? உங்கள் விருப்பத்துக்கேற்ப எந்த உடை வேண்டுமானாலும் அணிந்து கொள்ளுங்கள்” என முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.