பெங்களூரு: பெங்களூருவில் பிரதமர் மோடி பேரணிக்கு தடை விதிக்க கோரிய மனுவை கர்நாடக உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. பெங்களூருவில் பிரதமர் மோடி பங்கேற்கும் பேரணிக்கு தடை விதிக்கக் கோரி கர்நாடக ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. குறிப்பிட்ட கட்சிக்கு தடை விதித்தால் அனைவருக்குமான நீதி பாதிக்கப்படும் என நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.