கர்நாடக மாநிலம் பெலகாவியில் கிட்டூர் பகுதியில் நடைபெற்ற திருமணத்திற்குச் சென்று திரும்பியபோது கார் மரத்தில் மோதி ஏற்பட்ட பயங்கர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
விபத்தில் உயிரிழந்தவர்கள் அனைவரும் கர்நாடகாவின் தார்வாட் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது. திருமணத்திற்குப் பிறகு வீட்டிற்குச் சென்றபோது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதி விபத்து ஏற்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காரில் இருந்த 9 பேரில் 6 பேர் உயிரிழந்தனர். அதிர்ஷ்டவசமாக காரில் இருந்த 2 குழந்தைகள், சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர். இந்த விபத்து குறித்து சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.