இந்த விபத்தில் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர்.புனே- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் நடந்த விபத்தில் உயிரிழந்த அனைவரும் சிவமோஹா மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 13 பேர் உயிரிழந்துள்ள நிலையில் படுகாயமடைந்தவர்கள் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கிடையில் பஸ் ஓட்டும்போது டிரைவர் தூங்கியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.