விழாவின் முக்கிய நிகழ்வாக வரும் 19ம் தேதி பக்தர்கள் கரகம், மதுக்குடம் ஆகியவற்றை ஊர்வலமாக எடுத்து வருவர். இதையொட்டி காவடி எடுத்தும், பால்குடம் எடுத்தும், பூக்குழி இறங்கியும் மற்றும் முளைப்பாரி எடுத்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவர். விழாவில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் எடுத்து தங்கள் வேண்டுதலை நிறைவேற்றுவர் என்பது குறிப்பிடத்தக்கது. தினமும் பல்வேறு அமைப்பினர் மற்றும் சமுதாயத்தினர் சார்பில் மண்டகப்படிகள் நடைபெறும். திருவிழா ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் பழனிகுமார், உதவி ஆணையர் ஞானசேகரன், செயல் அலுவலர் பாலாஜி ஆகியோர் செய்து வருகின்றனர்.