காரைக்கால்: காரைக்கால் மாவட்டத்தில் உள்ள சிறையில் தண்டனை கைதிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. புதுச்சேரியை சேர்ந்த கைதிகள் பிரதிஷ், அமலன் ஆகியோர் கைதி ஆறுமுகத்தை சரமாரியாக தாக்கியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. தாக்குதலில் படுகாயமடைந்த ஆறுமுகம் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நிலையில் இருவர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.