மதுரை: கன்னியாகுமரி மாவட்டத்தில் விதிகளை மீறி இயங்கும் மினி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரிய வழக்கில், அரசு பேருந்து இயக்கப்படும் வழித்தடங்களில் இதுபோன்ற மினிபேருந்துகள் இயங்க எவ்வாறு அனுமதிக்கப்படுகிறது? என நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். நாகர்கோவிலைச் சேர்ந்த ஜான் விக்டர் தாஸ் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுமீது ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. வழக்கு குறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஆணையர் மற்றும் குமரி மாவட்ட ஆட்சியர் தரப்பில் பதில்தர உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.