கன்னியாகுமரி: கள்ளக்கடல் எச்சரிக்கை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்றும் நாளையும் கடற்கரைக்கு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கடலில் திடீரென பலத்த காற்று வீசுவதோடு கடலோரப் பகுதிகள் கொந்தளிப்புடன் காணப்பட வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மீனவர்கள், கடலோரப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் சுற்றுலா பயணிகள் கடற்கரை பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும் குமரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.