கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் கோதையாறு பாசன திட்டத்தின் கீழ் ராதாபுரம் கால்வாயில் நீர் திறக்கப்பட்டுள்ளது. ராதாபுரம் கால்வாயில் இருந்து தண்ணீரை சபாநாயகர் அப்பாவு திறந்து வைத்தார். 150 கனஅடி நீர் திறக்கப்பட்டதன் மூலம் நெல்லை மாவட்டம் ராதாபுரம் வட்டத்தில் 17,000 ஏக்கர் பாசன வசதி பெறும்.