கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் ரவுடி சகாயம் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 15 வயது சிறுவனை போலீசார் கைது செய்துள்ளனர். கொலை வழக்கில் தொடர்புடைய மேலும் 2 சிறுவர்களை போலீசார் தேடி வருகின்றனர். திரைப்படங்களில் வருவதுபோல் தன்னை தாக்கிய ரவுடியை நண்பர்களுடன் இணைந்து சிறுவன் கொலை செய்ததாக தகவல் தெரிவித்துள்ளான். ரவுடி தாக்கியதால் ஆத்திரத்தில் இருந்த சிறுவன், தனது நண்பர்களுடன் இணைந்து பழிக்கு பழியாக கொலை செய்ததாக கூறியுள்ளான்.