ஆனால் நாயின் உரிமையாளர் யார் என்பதை இதுவரை அடையாளம் காணமுடியவில்லை என்றும் ஊழியர்கள் தெரிவித்தனர். மருத்துவமனையில் உள்ள பிசிசியோ தெரபி கட்டடத்திற்கு அடிக்கடி செல்லும் நாய் இரவானதும் பிணவறை முன் வந்து படுப்பதை வழக்கமாக வைத்துள்ளது. நாயின் விசுவாசத்தை கண்டு நெகிழ்ச்சி அடைந்த பலரும் அதற்கு ராமு என்று செல்ல பெயரிட்டு அழைத்து வருகின்றனர். ஆரம்பத்தில் யார் எதை கொடுத்தாலும் சாப்பிடாமல் இருந்த நாய் தற்போது மருத்துவமனை பணியாளர்களும், நோயாளிகளும் அளிக்கும் பிஸ்கட் போன்றவற்றை உண்கிறது. மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் இடையேயான உறவின் வலிமைக்கு எடுத்துக்காட்டாக இருக்கும் ராமுவின் பாசமும், விசுவாசமும் காண்பவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது என்பது மட்டுமே உண்மை.