கனியாமூர் பள்ளி கலவரம் மாணவி ஸ்ரீமதியின் தாயிடம் 3 மணி நேரம் விசாரணை

வேப்பூர்: கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அடுத்த கனியாமூர் தனியார் பள்ளி விடுதியில் தங்கி படித்து வந்த மாணவி ஸ்ரீமதி கடந்த 2022 ஜூலை 13ம்தேதி உயிரிழந்ததையடுத்து நடந்த போராட்டம் கலவரமாக மாறியது. இதில் பள்ளி சூறையாடப்பட்டது. இந்த வழக்கில் உயர் நீதிமன்ற உத்தரவின்படி மாணவியின் தாய் செல்வி மற்றும் விசிக நிர்வாகி திராவிடமணி ஆகியோரிடம் விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவினர் சம்மன் அனுப்பினர். அதன்படி கள்ளக்குறிச்சி சிறப்பு புலனாய்வு குழு அலுவலகத்தில் நேற்று முன்தினம் விசிக நிர்வாகி திராவிடமணி ஆஜரானார். இந்நிலையில் நேற்று கடலூர் மாவட்டம், வேப்பூர் அடுத்த பெரியநெசலூர் கிராமத்தில் உள்ள ஸ்ரீமதியின் வீட்டிற்கு கள்ளக்குறிச்சி சிறப்பு புலனாய்வு குழு துணை காவல் கண்காணிப்பாளர் அம்மாதுரை மற்றும் ஆய்வாளர் தேவேந்திரன் தலைமையிலான போலீசார் சென்று ஸ்ரீமதியின் தாய் செல்வி மற்றும் அவரது தந்தை ராமலிங்கத்திடம் 3 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

Related posts

விம்பிள்டன் டென்னிஸ் 2வது சுற்றில் மாயா

யூரோ கோப்பை கால்பந்து; காலிறுதியில் துருக்கி

உலக சாம்பியன்களுக்கு உற்சாக வரவேற்பு: மும்பையில் இன்று வெற்றி ஊர்வலம்