சென்னை: திமுக துணை பொது செயலாளர் கனிமொழி எம்பி தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: அமைச்சரவையில் யார் அமைச்சராக இருக்க வேண்டும், இருக்கக் கூடாது என்பதை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர் மட்டுமே முடிவு செய்ய முடியும். ஆளுநராக இருக்கும் ரவிக்கு அதை முடிவு செய்யும் எந்த அதிகாரமுமில்லை. அரசியலமைப்பு சட்டத்தை ஆளுநர் மதிக்க வேண்டும். இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.