திருப்பூர்: காங்கேயம் அருகே சிவன்மலை சுப்பிரமணியசுவாமி கோவில் ஊழியர் வேலுச்சாமிக்கு கத்திக்குத்து முன்விரோதத்தால் மாமனார் வேலுச்சாமியை கத்தியால் குத்திவிட்டு தலைமறைவான மருமகன் பிரபாகரனுக்கு போலீஸ் வலைவீசி வருகிறது. படுகாயமடைந்த வேலுச்சாமி, ஈரோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தலைமறைவான பிரபாகரன் வள்ளியரச்சல் ஊராட்சி முன்னாள் அதிமுக செயலாளராக இருந்தவர்.