சென்னை: மசூதி உ ண்டியல் பணம் தொடர்பாக அவதூறு பரப்பிய காஞ்சிபுரம் மாவட்ட பாஜக செயலாளர் செல்வம் கைது செய்யப்பட்டுள்ளார். மசூதியில் வசூலான உண்டியல் பணத்தை எண்ணும் காட்சிகளை சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்து அவதூறு பரப்பியதாக புகார் எழுந்துள்ளது. முபாரக் பாட்ஷா என்பவர் கொடுத்த புகாரின் பேரில் செல்வம் மீது காஞ்சிபுரம் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளார்.