இதில் காஞ்சிபுரம் மட்டுமின்றி சுற்றுவட்டார பகுதிகளான ஓரிக்கை, செவிலிமேடு, மாவட்ட கலெக்டர் அலுவலகம், பேருந்து நிலையம், ஒலிமுகமதுபேட்டை, பாலுச்செட்டிசத்திரம், தாமல், சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை, திம்மசமுத்திரம், புஞ்சை அரசன்தாங்கல், அய்யங்கார்குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. இந்த மழையால் காஞ்சிபுரம் உளகளந்த பெருமாள் கோயில் எதிரில் கழிவுநீர் கால்வாய் மேனுவலில் இருந்து மழைநீர் கலந்து வெளியேறி அப்பகுதியில் துர்நாற்றம் வீசியது.
மேலும், மேட்டுத்தெரு, கீரை மண்டபம், கங்கைகொண்டான் மண்டபம் பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகினர். இதேபோன்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளான வாலாஜாபாத், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட பகுதிகளிலும் பரவலாக மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.