காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மேயருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்துள்ளது. காஞ்சிபுரம் மேயர் மகாலட்சுமிக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்துள்ளது. காஞ்சிபுரம் மாநகராட்சி கூட்டத்தில் 51 கவுன்சிலர்களும் கலந்துகொள்ளாததால் தீர்மானம் தோல்வியில் முடிந்தது. நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்ததை அடுத்து தனது மேயர் பதவியை மகாலட்சுமி தக்க வைத்தார்.