காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன் மாநில பெற்றோர் – ஆசிரியர் கழக உறுப்பினராக தேர்வு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன், மாநில பெற்றோர் – ஆசிரியர் கழக உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். மாநில கல்வி துறையின் மூலம் செயல்படும், தமிழ்நாடு மாநில பெற்றோர் – ஆசிரியர் கழக பொதுக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினராக காஞ்சிபுரம் தொகுதி எம்எல்ஏவும், மாநில மாணவரணி செயலாளருமான எழிலரசன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மேலும், தமிழ்நாடு மாநில பெற்றோர் – ஆசிரியர் கழக பொதுக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினராக வங்கி துறை, சட்டமன்ற உறுப்பினர், செய்தித்துறை, பத்திரிக்கை துறை, ஓய்வுபெற்ற அரசு அலுவலர் என 5 பேரில், காஞ்சிபுரம் எம்எல்ஏவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதற்காக உத்தரவை அரசு செயலாளர் குமரகுருபரன் பிறப்பித்துள்ளார்.

Related posts

ஒன்றிய அரசின் புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வக்கீல்கள் கருப்பு நாளாக அனுசரிப்பு

திருத்தணி நகராட்சி சார்பில் இயற்கை உர விற்பனை நிலையம் துவக்கம்

பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த 2 பேர் தஞ்சாவூரில் கைது: ஜூலை 5ம் தேதி வரை நீதிமன்ற காவல்