காஞ்சிபுரம் மாநகர் மாவட்ட மதிமுக செயலாளர் வளையாபதி விடுவிப்பு: வைகோ அதிரடி நடவடிக்கை

சென்னை: காஞ்சிபுரம் மாநகர் மாவட்ட மதிமுக செயலாளர் இ.வளையாபதி அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். காஞ்சிபுரத்தில் பெண் இன்ஸ்பெக்டர் கொலை வழக்கில் மதிமுக மாவட்டச் செயலாளர் வளையாபதி கைது செய்யப்பட்டார். இந்தநிலையில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று வெளியிட்ட அறிவிப்பு:

காஞ்சிபுரம் மாநகர் மாவட்ட மதிமுக செயலாளர் இ.வளையாபதி அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுகிறார். காஞ்சிபுரம் புறநகர் மாவட்டச் செயலாளர் ஜி.கருணாகரன் காஞ்சிபுரம் மாநகர் மாவட்டக் கழக நிர்வாகிகள் மற்றும் ஒன்றிய, நகரச் செயலாளர்களுடன் இணைந்து தொடர்ந்து கழகப் பணியாற்றுவார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related posts

புதுச்சேரியில் முழு அடைப்பு போராட்டம்: 2 பேருந்துகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டதால் பரபரப்பு

ரவுடி காக்கா தோப்பு பாலாஜி என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பாக காவல்துறை அதிகாரி விளக்கம்!!

ட்ரோன் மூலம் விநாயகர் சிலைகள் விஜர்சனம்