தொடர்ந்து, மாவட்ட கலெக்டரிடம் நம்பிக்கை இல்லாத தீர்மானம் கொண்டுவர வேண்டுமென மனு அளித்திருந்தனர். இந்தநிலையில், காஞ்சிபுரம் மாநகராட்சியில் மொத்தம் வரி விதிப்பு குழு, நகர அமைப்பு குழு, கணக்கிட்டு குழு, பொது சுகாதார குழு நான்கு குழுக்களை சேர்ந்த உறுப்பினர்கள், 10 கவுன்சிலர்கள், குழு உறுப்பினராக இருந்தவர்கள் ராஜினாமா செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே, பணிகள் குழு ராஜினாமா செய்த நிலையில், தற்பொழுது 4 குழுக்கள் ராஜினாமா கடிதம் அளித்துள்ளனர். தொடர்ந்து நேற்று திமுக, அதிமுக, பாமக கட்சிகளை சேர்ந்த 10 உறுப்பினர்கள் காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையர் செந்தில் முருகனிடம், நேரில் சந்தித்து ராஜினாமா கடிதத்தை வழங்கி உள்ளனர்.