காஞ்சிபுரம் அருகே 2 லாரிகள் மோதி விபத்து: 2 பேர் உயிரிழப்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் 2 லாரிகள் மோதி கொண்ட விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். தேசிய நெடுஞ்சாலையில் சாலையை கடக்க முயன்ற டாராஸ் லாரி மீது மூட்டை ஏற்றிச் செல்லும் கனரக லாரி மோதி விபத்து ஏற்பட்டது. மூட்டை ஏற்றிச் சென்ற லாரியில் லிஃப்ட் கேட்டு சென்ற சாந்தி (50) என்பவர் உயிரிழந்தார். விபத்தில் படுகாயமடைந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதி; விபத்து குறித்து சுங்குவார்சத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Related posts

பழனி பஞ்சாமிர்தம் காலாவதி தேதி 30 நாட்களாக உயர்வு..!!

SIPCOT-ல் அமையும் கண்ணாடி உற்பத்தி தொழிற்சாலை!

சித்தூரில் பைக் மோதிய தகராறு வாலிபரை தாக்கிய 4 பேர் கைது