காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் சீனிவாசன் மர்மமான முறையில் மரணமடைந்தார். குண்டுகுளம் பகுதியை சேர்ந்த சீனிவாசன் (26) என்பவரை மதுவிலக்கு போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் சீனிவாசன் நேற்று மர்மமான முறையில் உயிரிழந்தார்.