இதையடுத்து மே மாதம் 19-ம் தேதி தொடங்கிய 2-ம் கட்ட அகழாய்விலும் பல்வேறு தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த பொருட்கள் கிடைத்தன. இதுவரை 10 மீட்டர் நீள அகலம் கொண்ட 6 குழிகள் தோண்டப்பட்டு அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றனர். மொத்த 800 தொல்பொருட்கள் கிடைத்துள்ளன. இந்நிலையில், தற்போது தமிழ்-பிராமி எழுத்துப் பொறிப்புகள் உள்ள பானை ஓடு சுடுமண் பொம்மைகள், அணிகலன் போன்றவை கிடைத்துள்ளன. வடதமிழ்நாட்டில் இதுவரை காஞ்சிபுரம், பட்டறைபெரும்புதூர் போன்ற இடங்களில் மட்டுமே தமிழ்-பிராமி எழுத்துப் பொறிப்புகளை கொண்ட பானை ஓடுகள் கிடைத்துள்ளன. இவை கி.மு. முதலாம் நூற்றாண்டை சார்ந்தவை என தெரிய வந்துள்ளது.