காஞ்சி காமாட்சியம்மன் கோயிலில் பாஜ மாநில செயலாளர் வழிபாடு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயிலில் பாஜ மாநில செயலாளர் அஸ்வத்தாமன் சாமி தரிசனம் செய்தார். காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயிலுக்கு, பாஜவின் மாநில செயலாளர் அஸ்வத்தாமன் நேற்று முன்தினம் வருகை புரிந்து சாமி தரிசனம் செய்தார். பின்னர், அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘அண்ணா தோற்றுவித்த திராவிட முன்னேற்ற கழகம் தற்போது திராவிட கழகமாக மாறி வருவதாகவும், மக்களின் அன்றாட பிரச்னைகளை கவனிக்காமல் தமிழ்த்தாய் வாழ்த்தை வைத்து அரசியல் செய்கிறது.

மேலும், திருமாவளவனோடு மத்திய அமைச்சர் எல்.முருகனை ஒருபோதும் ஒப்பிட முடியாது. அவர் சட்டம் பயின்றவர். ஆனால், திருமாவளவனோ மதமாற்றம் குறித்த செய்கையில் முனைவர் பட்டம் பெற்றார். அவர் முதலமைச்சர் ஆவதற்கு சீமான் ஆதரவு தெரிவிப்பதும், இன்று ஆதரவு தெரிவித்து இன்னும் சில நாட்களில் அவருக்கு எதிர்ப்பும் தெரிவிப்பார். ஆகையால், அதை ஒரு பொருட்டாக நினைக்கவில்லை’என்றார். அவருடன் பாஜ நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Related posts

கோவையில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

மகாராஷ்டிராவில் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல் செய்யப்படுவதால் பரபரப்பு: வாகன சோதனையை தீவிரப்படுத்த எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்

தீபாவளி போனஸ் கேட்டு லெம்பலக்குடி சுங்கச்சாவடி ஊழியர்கள் 2வது நாளாக போராட்டம் : கட்டணமின்றி செல்லும் வாகனங்கள்