இதனையடுத்து, கடந்த 19ம்தேதி நவக்கிரக ஹோமம், தனபூஜையும், 20ம்தேதி மூலவர் மற்றும் பரிவார தேவதைகளுக்கு அஷ்டபந்தன மருந்து சாற்றுதல், காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயிலில் இருந்து ஸ்ரீ நகரீஸ்வரர் கோயிலுக்கு சிவாச்சாரியார்களை அழைத்து வரும் நிகழ்வு நடந்தது. தொடர்ந்து, மகா தீபாராதனை நடைபெற்றது. இக்கோயிலில், நான்காம் நாளான நேற்று அதிகாலை ஊர்வலமாக மேள தாளங்கள் முழங்க கலசங்களில் புனிதநீர் கொண்டுவரப்பட்டு, மூலவருக்கும், பரிவார தெய்வங்களுக்கும் சிவாச்சாரியார்கள் மூலம் புனிதநீர் ஊற்றி மகா குப்பாபிஷேகம் விழா விமரிசையாக நடைபெற்றது.
அப்போது, அனைத்து பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. பின்னர் மூலவருக்கும், பரிவார தெய்வங்களுக்கும் அபிஷேகங்கள் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரத்துடன் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். விழாவில் கலந்துகொண்ட அனைத்து பக்தர்களுக்கும் பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் வஜ்ரவேலு, விழா குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.