இந்நிலையில் வாலாஜாபாத் அடுத்த வாரணவாசி ஊராட்சிக்கு உட்பட்ட அளவூரில் உள்ள அவரது இல்லத்தில், பொதுமக்கள் அஞ்சலிக்காக, காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் நாகராஜன் உடல் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி, உத்திரமேரூர் எம்எல்ஏ சுந்தர், காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் படப்பை மனோகரன், காஞ்சிபுரம் மாநகராட்சி துணை மேயர் குமரகுருநாதன், எஸ்சிஎஸ்டி பிரிவு மாநில பொதுச்செயலாளர் கன்னியப்பன், மாநில நிர்வாகிகள் அருணாசலம், பத்மநாபன் திரவியம், ஒன்றிய குழு தலைவர் தேவேந்திரன், ஒன்றிய குழு துணை தலைவர் சேகர், மாவட்ட இளைஞரணி யோகி, மாநகரத் தலைவர் நாதன், மாவட்ட நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், காங்கிரஸ் கட்சி தலைவர் நாகராஜன் உடலுக்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.