தாம்பரம் அருகே லோடு ஜீப் மோதி உயிரிழந்த காஞ்சி காங். மாவட்ட தலைவரின் உடலுக்கு அழகிரி அஞ்சலி

வாலாஜாபாத்: தாம்பரம் அருகே லோடு ஜீப் மோதி விபத்தில் உயிரிழந்த காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் நாகராஜனின் உடலுக்கு, காங். மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் நேரில் அஞ்சலி செலுத்தினர். காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவரும், வாலாஜாபாத் ஒன்றிய கவுன்சிலருமான அளவூர் ஏ.வி.நாகராஜன், நேற்று முன்தினம் இரவு 11.30 மணியவில் வேளச்சேரி – தாம்பரம் பிரதானசாலை செம்பாக்கம், காமராஜபுரம் பேருந்து நிறுத்தம் அருகே தள்ளுவண்டி டிபன்கடை அருகே நின்றுக்கொண்டிருந்தபோது, லோடு ஜீப் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.

இந்நிலையில் வாலாஜாபாத் அடுத்த வாரணவாசி ஊராட்சிக்கு உட்பட்ட அளவூரில் உள்ள அவரது இல்லத்தில், பொதுமக்கள் அஞ்சலிக்காக, காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் நாகராஜன் உடல் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி, உத்திரமேரூர் எம்எல்ஏ சுந்தர், காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் படப்பை மனோகரன், காஞ்சிபுரம் மாநகராட்சி துணை மேயர் குமரகுருநாதன், எஸ்சிஎஸ்டி பிரிவு மாநில பொதுச்செயலாளர் கன்னியப்பன், மாநில நிர்வாகிகள் அருணாசலம், பத்மநாபன் திரவியம், ஒன்றிய குழு தலைவர் தேவேந்திரன், ஒன்றிய குழு துணை தலைவர் சேகர், மாவட்ட இளைஞரணி யோகி, மாநகரத் தலைவர் நாதன், மாவட்ட நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், காங்கிரஸ் கட்சி தலைவர் நாகராஜன் உடலுக்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

Related posts

நாகல்கேணி பகுதியில் கஞ்சா விற்ற தம்பதி கைது

கூடுவாஞ்சேரி மின்வாரிய அலுவலகத்தை காயரம்பேடு பகுதிக்கு இடமாற்றம் செய்ய கடும் எதிர்ப்பு: நடவடிக்கை எடுக்க கிராம மக்கள் கோரிக்கை

திருப்போரூர் பேரூராட்சியில் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளால் விபத்து: வாகன ஓட்டிகள் கடும் அவதி, நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை