காஞ்சிபுரம்: கச்சபேஸ்வரர் கோயில் குடமுழுக்கு விழா நடைபெறுவதால் கோயில் அருகாமையில் உள்ள பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. குடமுழுக்கு விழா நடைபெறுவதை ஒட்டி கோயிலை சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது. கச்சபேஸ்வரர் கோயிலை சுற்றி மிக அருகாமையில் அமைந்துள்ள 11 பள்ளிகளுக்கு நாளை ஒருநாள் விடுமுறை அளிக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.